
புழல்: புழல் சிறையில் காவலர்கள் ேநற்று சோதனையில் ஈடுபட்ட போது, போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்ட கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (22) என்பவரை சோதனை செய்தபோது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த ஒரு செல்போன் மற்றும் அறையில் சிம் கார்டு, சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து, அருகில் தரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு செல்போன், பேட்டரி, சிம் கார்டு, சார்ஜர் பறிமுதல் செய்தனர். தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாபு (24). போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இரண்டு கைதிகளிடமும் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது சிறை காவலரிடம் தகராறில் ஈடுபட்டு சிறை காவலரை தாக்க முற்பட்டனர். இதைப் பார்த்த மற்ற காவலர்கள் தடுத்து மடக்கி விட்டனர். இதுகுறித்து சிறைத்துறை சார்பில், புழல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post புழல் சிறை வளாகத்தில் செல்போன்கள், சார்ஜர் பறிமுதல்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.