×

டிரைவிங் பயிற்சியில் ஆற்றில் கார் பாய்ந்து நகைக்கடை அதிபரின் மனைவி பரிதாப சாவு

சிதம்பரம்: டிரைவிங் பயிற்சியின்போது கார் ஆற்றுக்குள் பாய்ந்து, நகைக்கடை அதிபரின் மனைவி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழ வீதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் மங்கேஷ்குமார். இவரது மனைவி சுபாங்கி (47). இவர் நேற்று காலை டிரைவிங் பயிற்சிக்காக உறவினர் நாம்தேவுடன் காரில் சிதம்பரத்திலிருந்து தெற்கு பிச்சாவரம் வரை சென்றுள்ளார்.அங்குள்ள உப்பனாற்று பாலம் அருகே சென்றுவிட்டு மீண்டும் சிதம்பரம் நோக்கி காரை சுபாங்கி திருப்பினார்.அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து உப்பனாற்றுக்குள் பாய்ந்தது. காருக்குள் இருந்த நாம்தேவ், கதவை திறந்து வெளியேறி தப்பினார். சுபாங்கி மட்டும் உள்ளே மாட்டிக்கொண்டார். சிறிது நேரத்தில் கார் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. இதில் சுபாங்கி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள் வந்து காருக்குள் சிக்கியிருந்த சுபாங்கியின் உடலை கயிறு கட்டி மீட்டனர். இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டிரைவிங் பயிற்சியில் ஆற்றில் கார் பாய்ந்து நகைக்கடை அதிபரின் மனைவி பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : parethapa sawu sawu ,Chidambaram ,Cuddalore District ,Pity Sawu ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மே 1ம் தேதி...