×

வடமாநில பெண் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளிகள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். இதில் ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த அமித் குமார்(36) என்பவர் பிஸ்மிதா பத்ரா(32) என்ற மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், பிஸ்மிதா பத்ரா கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை கணவர் அமித் குமார் வீட்டில் இல்லாத நேரத்தில் வயிற்று வலி அதிகமானதால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி போலீசார் மயங்கிய நிலையில் இருந்த பிஸ்மிதா பத்ராவை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வடமாநில பெண் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Northstate ,Periyapalayam ,Thiruvallur district ,Panipakam ,Arani ,
× RELATED பெரியபாளையம் பேருந்து நிலையத்தில்...