×

ஸ்ரீ சர்வ சாய் பாபா ஆலய கும்பாபிஷேகத்தின் ஆண்டு நிறைவு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் ஜெயா நகர் விரிவாக்கம், குமரவேல் நகரில் உள்ள ஸ்ரீ சர்வ சாய் பாபா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சென்ற ஆண்டு 9.9.2022 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்று இந்த ஆண்டு 8.9.2023 வெள்ளிக்கிழமை முதலாம் ஆண்டு நிறைவு பெற்றது. இந்நிலையில் முதலாம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு நேற்று ஸ்ரீ சர்வ சாய்பாபாவுக்கு சிறப்பு ஹோமம், பூஜைகள், ஆரத்தி மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

அதன்படி காலை 7 மணிக்கு பாலாபிஷேகமும், 10 மணியளவில் சிறப்பு ஹோமமும், 11 மணிக்கு ஸ்ரீ சர்வ சாய்பாபாவுக்கு கலச அபிஷேகமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு ஆரத்தியும், மதியம் 1 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் சிறப்பு ஆரத்தியும், இதனைத் தொடர்ந்து சாய் பானுவின் பாபாவின் பாடல்கள் மற்றும் பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. பிறகு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் மற்றும் பொது மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

The post ஸ்ரீ சர்வ சாய் பாபா ஆலய கும்பாபிஷேகத்தின் ஆண்டு நிறைவு விழா appeared first on Dinakaran.

Tags : Sri Sarva ,Chai Baba Temple ,Kumbabishekha ,Tiruvallur ,Sri Sarva Chai Baba Temple ,Kumarawel City ,Tiruvallur Jaya Nagar ,Kumbabhishek ,
× RELATED ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி,...