×

ம.பி.யில் மர்ம நோய்க்கு 4 பேர் பலி

சத்னா: மத்திய பிரதேசத்தில் மர்ம நோய்க்கு 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் கோல் பழங்குடியினர் வசிக்கும் பகுதியை சேர்ந்த ராஜா கோல் கடந்த 6ம் தேதி வாந்தி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் 7ம் தேதி வீடு திரும்பிய அவர் மரணமடைந்தார்.

இதைத் தொடர்ந்து, இதே அறிகுறிகளுடன் இருந்த ராஜ் கோல் 8ம் தேதி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதே போல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை அடுத்தடுத்து மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர்.அதே போல், இந்த அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 6 பேரின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

The post ம.பி.யில் மர்ம நோய்க்கு 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : M. B. ,Satna ,Madhya Pradesh ,
× RELATED திருடர்கள் நிலத்தில் பிரதமர் மோடி...