×

கார் மோதி 2 பேர் பரிதாப பலி

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே நடந்த 2 விபத்துக்களில் கார் மோதி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் கிராமத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நேற்று காலை ஒரு வாழைத்தார் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றது. அதனால், அந்த லாரியில் இருந்த வாழைத்தார்களை வேறு ஒரு லாரிக்கு, கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன்சாவடியை சேர்ந்த கார்த்திக் (35) என்பவர் ஏற்றி கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த கார், கார்த்திக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். காரில் வந்த 3 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

இதேபோன்று மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம் பூங்கா நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (58). இவர் நேற்று காலை சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த கார் மோதியது. இதில் சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post கார் மோதி 2 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Madurandakam ,Janakipuram ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...