×

ஜெட் ஏர்வேஸ் நிறுவனரின் காவல் செப்.14 வரை நீட்டிப்பு

மும்பை: கனரா வங்கியில் ரூ.538 கோடி முறைகேடு செய்த பண மோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை அமலாக்கதுறை அதிகாரிகள் கடந்த 1ம் தேதி கைது செய்தனர். இந்த முறைகேடு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவரை 11ம் தேதி (நேற்று) வரை காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த காவல் நேற்றுடன் முடிந்த நிலையில், அவர் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவரது அமலாக்கத்துறை விசாரணைக்கான காவலை நாளை மறுநாள் வரை (செப்.14) வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post ஜெட் ஏர்வேஸ் நிறுவனரின் காவல் செப்.14 வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Jet Airways ,Mumbai ,Naresh Koyal ,Kanara Bank ,Dinakaraan ,
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...