×

இங்கிலாந்தில் தற்கொலைகளை கட்டுபடுத்த Paracetamol மாத்திரையின் விற்பனையை வரைமுறைப்படுத்த அந்நாட்டு அரசு திட்டம்!

லண்டன்: காய்ச்சலுக்கு மருந்தான பாராசிட்டமால் விற்பனையை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்தில் Paracetamol மாத்திரைகளை அதிகம் உட்கொண்டு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அம்மாத்திரையின் விற்பனையை வரைமுறைப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்கொலையைத் தடுக்கும் தேசியக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டரை ஆண்டுகளில் தற்கொலை விகிதங்களைக் குறைக்க இங்கிலாந்து இலக்கு வைத்துள்ளது. கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ்ஸின் 2018 ஆய்வு அறிக்கையின்படி, பாராசிட்டமால் பொதுவாக தற்கொலைக்கு பயன்படுத்தப்படுகிறது. அதிக அளவு பாராசிட்டமால் உட்கொண்ட பிறகு கல்லீரல் வீக்கமே மரணத்திற்கு முக்கிய காரணம் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

தற்போது, பாராசிட்டமால் மாத்திரைகள் அதிகபட்சம் இரண்டு பாக்கெட்டுகள் (16 மாத்திரைகள் 500 மி.கி) வாங்க அனுமதிக்கப்படுகிறது. புதிய கொள்கையில், மக்கள் கடைகளில் பாராசிட்டமால் வாங்குவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதைத் தொடர்ந்து, கூடுதல் விதிமுறைகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு அரசு மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை முகமையிடம் கேட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தில் சராசரியாக 5,000 பேர் தற்கொலை செய்துகொள்வதாக தேசிய சுகாதார சேவை மதிப்பிடுகிறது.

The post இங்கிலாந்தில் தற்கொலைகளை கட்டுபடுத்த Paracetamol மாத்திரையின் விற்பனையை வரைமுறைப்படுத்த அந்நாட்டு அரசு திட்டம்! appeared first on Dinakaran.

Tags : UK ,London ,UK Government ,Government ,Dinakaran ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...