×

திருப்பத்தூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: திருப்பத்தூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே இன்று அதிகாலை பஞ்சராகி நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது லாரி மோதியது. பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு லாரி, திடீரென பஞ்சராகி நின்றுக்கொண்டிருந்த வேன் மீது பயங்கரமாக மோதியது. மேலும் தடுப்பு சுவர் மீது உட்கார்ந்து கொண்டிருந்த பெண்கள் மீதும் மோதியது.

இதில் ஓணாங்குட்டை பகுதியை சேர்ந்த தேவகி(35), சாவித்ரி(30), கலாவதி(32), கீதாஞ்சலி(35), தெய்வானை(28), சேட்டுஅம்மாள்(40), மீரா(38) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த லாரி டிரைவர் அருணாச்சலம் மற்றும் வேனில் இருந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேன் மீது லாரி மோதிய விபத்தில் 7 பெண்கள் இறந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் வழங்க உத்தரவிட்டார். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தின் திருப்பத்தூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

உதவித் தொகையாக ரூ. இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் PMNRF லிருந்து 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post திருப்பத்தூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thirupatur ,PM Modi ,Delhi ,PM ,Tiruptur ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...