×

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு விடுமுறை கால சிறப்பு ரயில் 4 நாட்களுக்கு இயக்கப்படும்: சேலம் கோட்ட ரயில்வே அறிவிப்பு

சேலம்: மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு விடுமுறை கால சிறப்பு ரயில் 4 நாட்களுக்கு இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுத பூஜை, விடுமுறையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16, 30 மற்றும் அக்டோபர் 21, 23-ம் தேதிகளில் விடுமுறை கால சிறப்பு மலை ரயிலை இயக்கப்படும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் சிறப்பு மலை ரயில் மதியம் 2.25-க்கு உதகை சென்று சேரும். மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே முதல் வகுப்பில் 40 இருக்கைகளும், 2-ம் வகுப்பில் 140 இருக்கைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. குன்னூரில் இருந்து உதகைக்கு முதல் வகுப்பில் 80 இருக்கைகளும், 2-ம் வகுப்பில் 140 இருக்கைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்திருக்கிறது.

The post மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு விடுமுறை கால சிறப்பு ரயில் 4 நாட்களுக்கு இயக்கப்படும்: சேலம் கோட்ட ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Madtupalai ,Salem Gotta Railway ,Salem ,Madupalayam ,Help ,Madupalam ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...