திண்டுக்கல் : மணப்பாறை அருகே சீருடை போல ஒரே நேரத்தில் சேலை அணிந்து பெண்களும், வேட்டி,சட்டை அணிந்த ஆண்களும் ஊர்வலமாக வந்து கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள். திருச்சி மாவட்டம் மனப்பாறையை அடுத்துள்ள வைரம்பட்டியில் மாரியம்மன், காளியம்மன், கோட்டை கரைமுனியப்பன், தேக்குமலையான், பாலதண்டாயுதபாணி உள்ளிட்ட தெய்வங்களை உள்ளடக்கிய கோயிலில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுப் பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
கரகமரத்திலிருந்து சீருடைபோல ஒரே நிறத்திலான சேலையை அணிந்திருந்த பெண்கள் தரை தப்பட்டை முழங்க, பட்டாசு சத்தம் விண்ணை பிளக்க, பொங்கல் கூடையுடன் ஊர்வலமாக வந்தனர். சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆண்கள் ஒரே நேரத்தில் வேட்டி, சட்டை அணிந்து முன்னே சென்றனர். ஊர்வலம் கோவிலை அடைந்ததும் கோயில் முன் பொங்கல் வைத்து வழிபாடு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த சுற்று பொங்கல் திருவிழாவில் மணப்பாறை சுட்டவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
The post 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற சுற்றுப் பொங்கல் திருவிழா: சீருடை போல ஒரே நிறத்தில் சேலை அணிந்து வந்த பெண்கள் appeared first on Dinakaran.
