×

வாணியம்பாடியில் குடும்பத்துடன் காரில் வந்து பிஸ்கட் கொடுத்து 4 ஆடுகள் திருட்டு

*வீடியோ வைரல்

வாணியம்பாடி : வாணிம்பாடியில் சாலையில் சுற்றித்திரிந்த 4 ஆடுகளுக்கு குடும்பத்துடன் காரில் வந்தவர்கள் பிஸ்கட் கொடுத்து திருடிச் சென்ற வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோணாமேடு மற்றும் ஆசிரியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருபவர்கள் சிலர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகள் காலை நேரத்தில் அவிழ்த்து விட்டால் சாலைகளில் உணவு தேடி அலைவதும், மாலை வீடுகளுக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று காலை ஆசிரியர் நகர், முதல் குறுக்கு தெருவில் ஆடுகள் சுற்றி திரிந்து கொண்டு இருப்பதை பார்த்த காரில் குடும்பத்துடன் வந்தவர்கள் காரை நிறுத்தி குழந்தைக்கு ஆடுகளை காண்பிப்பது போல், ஆட்டுக்கு பிஸ்கட் கொடுத்து அடுத்தடுத்து 4 ஆடுகளை திருடி காருக்குள் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தன் வீட்டுக்கு எதிரில் வெகு நேரமாக கார் நிற்ப்பதும், ஆடுகளை திருடுவதும் கண்டு தன்னுடைய செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வாணியம்பாடி நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வாணியம்பாடியில் குடும்பத்துடன் காரில் வந்து பிஸ்கட் கொடுத்து 4 ஆடுகள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Waniyambadi ,Valiyambadi ,Vaanimbadi ,Vanyambadi ,
× RELATED வாணியம்பாடி கடைகளில் ரெய்டு 216 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்