×

முத்தையாபுரம் சூசைநகரில் திமுக முப்பெரும்விழா அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவி வழங்கினார்

 

ஸ்பிக்நகர், செப்.11: தூத்துக்குடி முத்தையாபுரத்தை அடுத்த சூசைநகரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவில் பங்கேற்று அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது: ‘கலைஞர் ஆட்சியில் தான் ஏழைகளுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அவருடைய வழியில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வருகிற செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை தகுதியான அனைவருக்கும் வழங்கப்படும். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது’ என்றார்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகபை, டிபன் பாக்ஸ், பெண்களுக்கு அரிசிபை மற்றும் அரசு தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் மாற்றுக் கட்சியினர் 35 பேர் திமுகவில் இணைந்தனர். விழாவில் மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன், மண்டல தலைவர் பாலகுருசாமி, கவுன்சிலர்கள் விஜயகுமார், பச்சிராஜன், சுயம்பு, பகுதி செயலாளர் மேகநாதன், வட்டச்செயலாளர் பிரசாந்த், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆனந்த், மகளிர் அணி ஜெயக்கனி, இளைஞரணி ஆல்பர்ட், நிர்வாகிகள் சோலையப்பன், மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

The post முத்தையாபுரம் சூசைநகரில் திமுக முப்பெரும்விழா அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : DMK ,Triennial ,Minister ,Geethajeevan ,Muthiyapuram Soosainagar ,Spignagar ,Susainagar ,Tuticorin Muthiyapuram ,Muthiyapuram Susainagar ,
× RELATED பேரூர் திமுக சார்பில் திருவேங்கடத்தில் நீர்மோர் பந்தல்