×

போதை பொருள் வைத்து இருந்த 2 வாலிபர்கள் கைது

 

கூடலூர், செப்.11: கூடலூர் நகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடப்பதாக கூடலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் டிஎஸ்பி செல்வராஜ் உத்தரவின் பேரில் போலீசார் கடந்த சில தினங்களாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று எஸ்ஐ கபில்தேவ் உள்ளிட்ட போலீசார் கூடலூர் தேவர்சோலை சாலையில் ரோந்து சென்றனர்.

அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட எம்டிஎம் போதை பொருள் 3 கிராம் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ 6 ஆயிரம் ஆகும். இது குறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிந்து சம்பவத்தில் தொடர்புடைய புஸ்பகிரி பகுதியை சேர்ந்த அனூப் (27), அஸ்வின் (28) ஆகிய 2 பேரை கைது செய்து, போதை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

The post போதை பொருள் வைத்து இருந்த 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Dinakaran ,
× RELATED கூடலூர் அருகே காட்டு யானைகளிடம்...