×

மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த சிவகங்கை பயணி திடீர் மரணம்

சென்னை: ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று காலை வந்தது. விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் கீழே இறங்கிய நிலையில், சிவகங்கை இளையான்குடியைச் சேர்ந்த தனசேகர்(38) மட்டும் இருக்கையிலேயே தூங்குவது போல் அமர்ந்திருந்தார். இதையடுத்து விமான பணிப்பெண் தனசேகரிடம் சென்னை வந்துவிட்டது, விமானத்தை விட்டு கீழே இறங்குங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் தனசேகரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இது குறித்து பணிபெண் தலைமை விமானிக்கு தகவல் அளித்தார். இதையடுத்து தலைமை விமானி, சென்னை சர்வதேச விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து மருத்துவ குழுவினர் விமானத்திற்குள் வந்து தனசேகரை பரிசோதித்தனர். அப்போது, கடுமையான மாரடைப்பால் பயணி தனசேகர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

The post மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த சிவகங்கை பயணி திடீர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Muskut ,Muscat ,Oman ,Indigo Airlines ,Chennai International Airport ,Sivaganga ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...