
லூதியானா: அனைவரும் தன்னுடன் வர வேண்டும் என்று இந்தியா விரும்புவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் நம்தாரி சர்வதேச தலைமையகமான பைனி சாஹிப்பில் சத்குரு பர்தாப் சிங் மற்றும் மாதா பூபிந்தர் கவுர் ஆகியோர் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது அவர் வௌியிட்ட அறிவிப்பில், “இந்தியா ஒரு சுயநல எண்ணம் கொண்ட நாடல்ல.
அது அனைவரும் தன்னுடன் வர வேண்டும் என விரும்புகிறது. வருவார்கள் என நம்புகிறது. சமூகத்தை பிளவுப்படுத்தும் சக்திகள் ஒரு நாட்டை மட்டுமல்ல. உலகம் முழுவதையும் சேதப்படுத்துகின்றன. மதத்தின் பொருள் ஒன்றுபடுவது. சிதைவதை பற்றி மதம் பேசவில்லை. உலகம் முழுவதுக்குமான பாதையை இந்தியா காட்ட வேண்டும். ஆனால் அதன் பாரம்பரியங்கள், கலாச்சாரத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.
The post அனைவரும் தன்னுடன் வர வேண்டும் என இந்தியா விரும்புகிறது: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து appeared first on Dinakaran.