×

தேனி அருகே நள்ளிரவில் கார் தீப்பிடித்து எரிந்து நாசம்: 3 பேர் உயிர்தப்பினர்

போடி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தவர் ராமலட்சுமி. இவர், தனது மகன் சுரேசுடன் நேற்றிரவு காரில் கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் பெரியகானல் அருகே உள்ள சூரியநெல்லி எஸ்டேட்டில் நடக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். காரை சிவகாசி முத்துநகரை சேர்ந்த பாபு ஓட்டினார். இந்த கார் நள்ளிரவு 12 மணியளவில் தேனி மாவட்டம், போடி அருகே உள்ள போடிமெட்டு மலைச்சாலை 10வது கொண்டை ஊசி அருகே வந்தபோது, திடீரென ரேடியேட்டரில் புகை வந்தது. இதையடுத்து கார் டிரைவர் பாபு காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது, காரில் தீ மளமளவென பிடிக்க ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், காருக்குள் இருந்த ராமலட்சுமி, அவரது மகன் சுரேஷே உடனடியாக காரில் இருந்து மீட்டார்.

இதுகுறித்து போடி குரங்கணி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், தீயணைப்புத்துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் 1 மணிநேரம் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது.இதைத்தொடர்ந்து ராமலட்சுமி மற்றும் அவரது மகனை வேறொரு காரில் பாதுகாப்பாக திருமண நிகழ்ச்சிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தேனி அருகே நள்ளிரவில் கார் தீப்பிடித்து எரிந்து நாசம்: 3 பேர் உயிர்தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Ramalakshmi ,Virudhunagar District, Sivakasi ,Surese ,Kerala State, ,Idri ,
× RELATED போடி அருகே வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி விறுவிறு