
சென்னை: சென்னை நகரில் சாலை அமைப்பதற்காக, மாநகராட்சியில் பேருந்து வழித்தட சாலைகள் துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் கோரி விண்ணப்பித்த டி.எஸ்.ஆர். என்ற நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி,அந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கியதை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடரலாம் என அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post சென்னை சாலை டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.