×

வார விடுமுறை நாட்களில் 100 ரூபாயில் நாள் முழுவதும் பயணம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு

சென்னை: வார விடுமுறை நாட்களில் 100 ரூபாயில் நாள் முழுவதும் பயணம் செய்யும் திட்டத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் முக்கியமான போக்குவரத்தாக மெட்ரோ ரயில் இருக்கிறது. 100 ரூபாயில் நாள் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் சென்று வரும் வகையில் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

அதாவது ஒரு சுற்றுலா அட்டையை ரூ.150 ரூபாய் கொடுத்து பெற்று கொள்ள வேண்டும். இந்த சுற்றுலா அட்டை ஒரு நாள் மட்டுமே செல்லும். அந்த அட்டையை திருப்பி கொடுக்கும் போது ரூ.50 திருப்பி தரப்படும் என சென்னை மெட்ரோ ரயில் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

The post வார விடுமுறை நாட்களில் 100 ரூபாயில் நாள் முழுவதும் பயணம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Metro Rail Corporation ,Chennai ,Metro Rail Corporation ,Chennai Metro Rail Company ,Dinakaran ,
× RELATED நிறுவன அடித்தள நாளை முன்னிட்டு மெட்ரோ...