×

ஜி-20 மாநாட்டுக்கான கூட்டறிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: ஜி-20 மாநாட்டுக்கான கூட்டறிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கூட்டறிக்கை வெளியிட ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக கூட்டறிக்கை வெளியிடப்படும். ஜி20 கூட்டறிக்கைக்கு ஒப்புதல் கிடைக்க காரணமான அமைச்சர்கள், அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி. நமது குழுக்களின் கடும் முயற்சியால் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படுவதில் இழுபறி நீடித்த நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

The post ஜி-20 மாநாட்டுக்கான கூட்டறிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : G-20 Conference ,PM ,Narendra Modi ,Delhi ,G-20 ,Member States Approves ,for G-20 Conference ,
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...