சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் சிக்கராயபுரம் கல்குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். குவாரிகளில் தேங்கியுள்ள 0.350 டிஎம்சி மழைநீரை செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டுச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கல்குவாரி மழைநீரை செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கி உள்ளன. சுத்திகரித்த பின்னர் குடிநீரை சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post காஞ்சிபுரம் மாவட்டம் சிக்கராயபுரம் கல்குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீரை சுத்திகரிக்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.