×

பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

வருசநாடு: வருசநாடு மீரா ஆங்கிலப் பள்ளியில் மாணவ மாணவிகள் உடற்பயிற்சி நிறைந்த உடல் ஆரோக்கியம் பெற வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஒவ்வொரு நாளும் தன் உடலை பாதுகாப்பாக வைப்பதற்கும் ஒவ்வொரு நாளும் முயற்சி முனைப்போடு வாழ வேண்டும் அதை பேணி பாதுகாக்க வேண்டும் சத்தான உணவுகளை உண்ண வேண்டும், ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்கும் தினந்தோறும் சுகாதார முறையை பின்பற்ற வேண்டும் மேலும் நம் நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கும் இந்த செய்தியை கொண்டு செல்ல வேண்டும் உள்ளிட்ட சிறப்பு விழிப்புணர்வுகள் கருத்துரைகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் மோகன்பாபு தலைமை தாங்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக அங்கன்வாடி பணியாளர் செல்வபாக்கியம், பள்ளி ஆசிரியர்கள் சோனியா, மகாலட்சுமி, ராஜி ,பாண்டியம்மாள், சங்கீதா, பாண்டிசெல்வி, பிரவீனா செல்வி , சங்கீதா மற்றும் பெற்றோர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post பள்ளியில் விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Meera English School ,
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்