×

முதல்வரின் திட்டங்கள் அனைத்தும் மாணவ சமுதாய முன்னேற்றத்துக்கானது மாங்குடி எம்எல்ஏ பேச்சு

காரைக்குடி: முதல்வரின் திட்டங்கள் அனைத்தும் மாணவ சமுதாய முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே அறிவிக்கப்பட்டு வருகிறது என்று மாங்குடி எம்எல்ஏ தெரிவித்தார். காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ராஜபாண்டியன் வரவேற்றார். பதிவாளர் ராஜமேகன் முன்னிலை வகித்தார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ரவி தலைமை வகித்தார். மிதிவண்டிகளை வழங்கி எம்எல்ஏ மாங்குடி பேசுகையில், மாணவர்களின் எதிர்காலத்தை நிறைவேற்றவும், பெற்றோர்களின் சுமைகளை குறைக்கவும் முதல்வர் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். முதல்வரின் திட்டங்கள் அனைத்தும் மாணவ சமுதாய முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் காலை உணவு திட்டத்தின் மூலம் நூற்றாண்டுகள் கடந்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர்நிலைத்து நிற்கும். படிப்பது மட்டும் தான் உங்களின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.

விழாவை துவக்கிவைத்து நகராட்சி சேர்மன் முத்துத்துரை பேசுகையில், கல்வி என்றால் வள்ளல் அழகப்பரை நினைக்காமல் இருக்க முடியாது. கல்விவளர்ச்சிக்கு எத்தனையோ மகத்தான திட்டங்களை முதல்வர் அறிவித்துவருகிறார். இந்நகராட்சியில் காலைஉணவு திட்டத்தின் மூலம் 1600 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளின் உள்கட்டமைப்பு தனியார் பள்ளிக்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார். நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், நகர்மன்ற உறுப்பினர் கண்ணன், வட்ட செயலாளர் பாண்டி, காங்கிரஸ் நிர்வாகிகள், பிரவீன், பாலா, ஜெயபிரகாஷ், மாஸ்மணி, ரயில்வே தட்சிணாமூர்த்தி, கிட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

The post முதல்வரின் திட்டங்கள் அனைத்தும் மாணவ சமுதாய முன்னேற்றத்துக்கானது மாங்குடி எம்எல்ஏ பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mangudi ,MLA ,Karaikudi ,Minister ,Mangudi MLA ,
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...