×

களக்காடு அருகே விவசாயி மீது தாக்குதல்

களக்காடு, செப்.9: களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை, காந்திநகரை சேர்ந்தவர் அன்பு ரோஸ் மாணிக்கம் (67). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் ஈசாக் மகன் ஆனந்தராஜ் (45). இருவரும் நாய் வளர்த்து வருகின்றனர். சம்பவத்தன்று ஆனந்தராஜ் வளர்த்து வரும் நாயை, அன்புரோஸ் மாணிக்கம் நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆனந்தராஜ், அன்புரோஸ் மாணிக்கத்தின் நாயை தாக்கியுள்ளார். இதனை அறிந்த அன்புரோஸ் மாணிக்கம் நாயை தாக்கியது குறித்து தட்டி கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ், அன்புரோஸ் மாணிக்கத்தை கம்பால் தாக்கினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, ஆனந்தராஜை தேடி வருகிறார்.

The post களக்காடு அருகே விவசாயி மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Anbu Rose Manickam ,Manjuvilai, Gandhinagar ,Dinakaran ,
× RELATED களக்காடு புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள்