×

5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

நல்லம்பள்ளி, செப்.9: தொப்பூர் கணவாயில் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், முன்னால் சென்ற 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துள்ளானது. பெங்களூரில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று கோவையை நோக்கி சென்று கொண்டிருந்தது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் கணவாய் அருகே நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்தது. அப்போது சேலத்தை நோக்கி முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியதில் அதன் முன்னால் சென்று கொண்டிருந்த மேலும் 2 கார் மற்றும் அதன் முன் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் வந்த தம்பதிகளான சேலத்தைச் சேர்ந்த தினேஷ் (30), கலை பிரியா (25) ஆகிய இருவரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த தொப்பூர் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான வாகனங்களை தொப்பூர் போலீசார் மற்றும் சுங்க சாவடி பணியாளர்கள் இணைந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இந்த விபத்தினால் ஒருமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Nallampally ,Toppur pass ,Dinakaran ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...