×

முதல்வருக்கு நன்றி வரும் 30ம் தேதி நடக்கவிருந்த போராட்டம் ரத்து: ஜவாஹிருல்லா அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ சென்னையில் நேற்று அளித்த பேட்டி: கடந்த ஜூலை 9ம் தேதி அன்று கோவையில் நீண்ட கால சிறைவாசிகளை ஆதிநாதன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி மத்தியச் சிறை முற்றுகை போராட்டம் நடத்தினோம். முதல்வர் எங்கள் கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக 49 வாழ்நாள் சிறைவாசிகளை (இவர்களில் 20 பேர் முஸ்லிம் கைதிகள்) அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்ய அரசமைப்புச் சட்டத்தின் 161ம் பிரிவின் கீழ் ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளார். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். வரும் 30ம் தேதி நாங்கள் திட்டமிட்டிருந்த தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தை ரத்து செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post முதல்வருக்கு நன்றி வரும் 30ம் தேதி நடக்கவிருந்த போராட்டம் ரத்து: ஜவாஹிருல்லா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Jawahirilla ,Chennai ,Tamil Nadu Muslim Advancement Club ,M. H. Javahirullah ,MLA ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...