×

அக்கரையில் உள்ள பல கோடி மதிப்புள்ள பங்களா வீட்டின் சொத்து பத்திரம் மாயம்: பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் போலீசில் புகார்

சென்னை: அக்கரையில் உள்ள பல கோடி மதிப்புள்ள பங்களா வீட்டின் சொத்து பத்திரம் ஜெராக்ஸ் எடுக்க சென்ற போது மாயமானமாகவும், எனவே பத்திரத்தை கண்டுபிடித்து தர கோரி பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது குடும்பத்துடன் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு அக்கரையில் பங்களா வீடு ஒன்று உள்ளது. இந்த வீடு பல கோடி மதிப்புள்ளது என்று கூறப்படுகிறது. வார இறுதி நாட்களில் தான் அக்கரையில் உள்ள பங்களா வீட்டிற்கு தினேஷ் கார்த்திக் தனது குடும்பத்துடன் செல்வார். மற்ற நாட்களில் போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் தான் அவர் இருப்பார். இந்நிலையில், அக்கரையில் உள்ள பங்களா வீட்டின் சொத்து பத்திரத்தை நகல் எடுக்காமல் வைத்திருந்துள்ளார். இதனால் அவர் அக்கரையில் உள்ள பங்களா வீட்டின் அசல் சொத்து பத்திரத்தை ஜெராக்ஸ் எடுக்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென அவரது சொத்துப்பத்திரம் மாயமானதாக கூறப்படுகிறது. பத்திரத்தை எங்கு வைத்தோம் என்று தெரியாமல் வீடு மற்றும் கார் முழுவதும் தேடி பார்த்தும் பத்திரம் கிடைக்கவில்லை. பல கோடி மதிப்புள்ள அசல் பத்திரம் என்பதால் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் உடனே சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் மாயமான சொத்து பத்திரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கமாக சொத்து பத்திரம் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தால் புகாரை போலீசார் வாங்குவதில்லை. தற்போது இவர் கிரிக்கெட் வீரர் என்பதால் அவரை புகாரை போலீசார் வாங்கி விசாரித்து வருகின்றனர்.

 

The post அக்கரையில் உள்ள பல கோடி மதிப்புள்ள பங்களா வீட்டின் சொத்து பத்திரம் மாயம்: பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Akkara ,Dinesh Karthic ,Chennai ,Xerox ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...