×

சின்னமனூர் அருகே ஆட்டோ மீது ஜேசிபி மோதி 5 பெண்கள் காயம்: டிரைவர் கைது

சின்னமனூர், செப். 8: சின்னமனூர் அருகே கண்ணியம்பட்டியைச் சேர்ந்த காளிராஜ் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று மாலை சீலையம்பட்டியிலிருந்து 5க்கும் மேற்பட்ட பெண் கூலி தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு சீலையம்பட்டியிலிருந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கீழபூலானந்தபுரம் தேனி தேசிய நெடுஞ்சாலையில் வரும் போது திடீரென பள்ளத்திலிருந்து ரிவர்சில் வந்த பொக்லேன் இயந்திரம் ஆட்டோ மீது மோதியது. இதில், கண்ணியம்பட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமி (35), வெண்ணிலா (49), லோகராணி (50), சின்னத்தாயி (59), ஒச்சம்மாள் (70) உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். சின்னமனூர் போலீசார் ஜேசிபி ஓட்டி வந்த டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் கைது செய்து, வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post சின்னமனூர் அருகே ஆட்டோ மீது ஜேசிபி மோதி 5 பெண்கள் காயம்: டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : JCB ,Chinnamanur ,Kaliraj ,Kanniyampatti ,Seelaiyambatti ,JCP ,Dinakaran ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்