×

குத்தாலம் அருகே ஆபத்தான மின்கம்பம் உடனடி சீரமைப்பு

குத்தாலம், செப்.8: மயிலாடுதுறை அருகே ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் தினகரன் செய்தி எதிரொலியால் மாற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், கோமல் ஊராட்சி பாடகச்சேரி பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது என அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தினகரன் நாளிதழில் ஜூலை 25ம் தேதி செய்தி வெளியானது.

இதையறிந்த மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து முழுவதும் சேதமடைந்துள்ள நிலையில் இருந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு மின்வாரிய ஊழியர்களைக் கொண்டு அந்த இடத்தில் புதிய மின் கம்பத்தை அமைத்தனர். குத்தாலம் அருகே ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் தினகரன் நாளிதழுக்கும், மின்சார வாரிய அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

The post குத்தாலம் அருகே ஆபத்தான மின்கம்பம் உடனடி சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Kutthalam ,Mayiladuthurai ,Dhinakaran News ,Guthalam ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...