×

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர், செப்.8: திருவள்ளூர், பெரியகுப்பத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுனில் குமார் தலைமை தாங்கி மின் நுகர்வோர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். திருவள்ளூர் கோட்ட செயற்பொறியாளர் கனகராஜன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில், குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்ய புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும், புதிதாக குடியிருப்புகள் உருவாகும் பகுதியில் புதிய மின்மாற்றி மற்றும் மின் கம்பங்கள் அமைக்க வேண்டும் என பலர் கோரி்க்கை மனுவை அளித்தனர்.

இதேபோல் தெரு விளக்குகள் இல்லாத பகுதிகளில் புதிதாக தெரு விளக்குகள் அமைக்க வேண்டியும், பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை மாற்றி புதிய தெருவிளக்குகள் அமைக்க வேண்டியும், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்து தருமாறும் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுனில் குமார், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு செயற்பொறியாளர், உதவி செயற் பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் உதவி செயற்பொறியாளர்கள் குமார், ஜானகிராமன், சேகர், பாலச்சந்தர், யுவராஜ், உதவி பொறியாளர்கள் தட்சிணாமூர்த்தி, கஜேந்திரன், பாலாஜி, ரமேஷ், குமரவேல், காஞ்சனா, வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Power Board ,Periyakuppam, Thiruvallur ,Dinakaran ,
× RELATED குறைந்தழுத்த மின் பிரச்னை கூடுதல்...