பெரும்புதூர், செப்.8: சென்னை, பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியை சேர்ந்தவர் எபினேசன் (32). பிரபல ரவுடியான இவர், கடந்த 3 தினங்களுக்கும் முன்பு ஆட்டோவில் தண்டலம்- பேரம்பாக்கம் சாலை வழியாக மண்ணூர் கூட்டுச்சாலையில் இருந்து மேவளூர்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மண்ணூர் அருகே சென்றபோது எதிர் திசையில் காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், எபினேசன் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி, அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து பெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ‘எபினேசனுக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ராஜேஷ் என்பருக்கும் இடையே முன் விரோதம் காரணமாக எபினேசன் கொலை செய்யபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, கொலையாளிகளை பிடிக்க பெரும்புதூர் டிஎஸ்பி சந்திரகாசன் தலைமையில், 4 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், பெரும்புதூர் அடுத்த பால்நல்லூர் நாகா (எ) நாகராஜ் (26), அசோக் (25), சகா (எ) சீனிவாசன் (23), திருவள்ளூர் பிரவீன்குமார் (19), நாகராஜ் (24) ஆகிய 5 பேரும், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
The post ரவுடி கொலை வழக்கில் 5 வாலிபர்கள் கோர்ட்டில் சரண் appeared first on Dinakaran.