×

ரவுடி கொலை வழக்கில் 5 வாலிபர்கள் கோர்ட்டில் சரண்

பெரும்புதூர், செப்.8: சென்னை, பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியை சேர்ந்தவர் எபினேசன் (32). பிரபல ரவுடியான இவர், கடந்த 3 தினங்களுக்கும் முன்பு ஆட்டோவில் தண்டலம்- பேரம்பாக்கம் சாலை வழியாக மண்ணூர் கூட்டுச்சாலையில் இருந்து மேவளூர்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மண்ணூர் அருகே சென்றபோது எதிர் திசையில் காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், எபினேசன் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி, அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து பெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ‘எபினேசனுக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ராஜேஷ் என்பருக்கும் இடையே முன் விரோதம் காரணமாக எபினேசன் கொலை செய்யபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, கொலையாளிகளை பிடிக்க பெரும்புதூர் டிஎஸ்பி சந்திரகாசன் தலைமையில், 4 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், பெரும்புதூர் அடுத்த பால்நல்லூர் நாகா (எ) நாகராஜ் (26), அசோக் (25), சகா (எ) சீனிவாசன் (23), திருவள்ளூர் பிரவீன்குமார் (19), நாகராஜ் (24) ஆகிய 5 பேரும், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

The post ரவுடி கொலை வழக்கில் 5 வாலிபர்கள் கோர்ட்டில் சரண் appeared first on Dinakaran.

Tags : Ebinesan ,Thirumazhisai ,Poontamalli, Chennai ,Dinakaran ,
× RELATED வாலிபரை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்