சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி) இயக்குநர் அருண் குமார் சின்ஹா உடல்நிலைக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக அதிகாரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post எஸ்பிஜி இயக்குனர் மறைவுக்கு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.