×

குவைத்தில் தவித்த 19 தமிழ் இளைஞர்கள் மீட்பு தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை : குவைத்தில் வேலைக்கு சென்று ஏமாற்றப்பட்டு, தாயகம் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 19 இளைஞர்களை தமிழக அரசு மீட்டு தாயகத்திற்கு அழைத்து வந்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. மீட்கப்பட்டு வந்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாழ்வாதார உதவிகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post குவைத்தில் தவித்த 19 தமிழ் இளைஞர்கள் மீட்பு தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Ramadas ,Tamil Nadu government ,Kuwait ,
× RELATED தமிழக அரசு, கட்சிகளுடன் கலந்துபேச...