×

உ.பியில் சோகம்; இறந்த மகனின் உடலை தள்ளுவண்டியில் எடுத்து செல்லும் பெண்; வீடியோ வைரல்


மீரட்: உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு மதுக்கடை அருகே இறந்து கிடந்தார். இதையறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே ராஜூவின் தாயும், தம்பியும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இறுதி சடங்கு செய்வதற்காக அவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல வாகன உதவியை நாடினர். பல மணி நேரமாக கேட்டும் எந்த வாகனமும் கிடைக்கவில்லை. இதனால் ராஜூ உடலை தள்ளுவண்டியில் ஏற்றி அவரது தாயும், தம்பியும் பல மணி நேரம் கொண்டு சென்றனர்.

இந்நிலையில் வாகனம் கிடைக்காததால் மனமுடைந்த தாய்-மகன் ஆகியோர் இறுதி சடங்கு செய்வதற்கும் போதிய பணம் இல்லாததால் ஒரு போலீஸ் நிலையத்தை நாடினர். அங்கிருந்த எஸ்ஐ அமித்குமார் மாலிக் நிதி உதவி செய்ததோடு மேலும் சிலரிடமும் நிதி திரட்டி வழங்கினார். பின்னர் இறுதி சடங்கு நடந்துள்ளது. இதற்கிடையே வாலிபர் உடலை தள்ளுவண்டியில் ஏற்றி சென்ற வீடியோ வைரலானதை தொடர்ந்து மீரட் மருத்துவ கல்லூரி முதல்வர் அகிலேஷ் மோகன் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. அறிக்கை கிடைத்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

The post உ.பியில் சோகம்; இறந்த மகனின் உடலை தள்ளுவண்டியில் எடுத்து செல்லும் பெண்; வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : UP ,Meerut ,Raju ,Meerut, Uttar Pradesh ,
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...