×

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள குருமசேரி பகுதியை சேர்ந்தவர் கோபி (62). அவரது மனைவி ஷீலா (55). இவர்களது மகன் ஷிபி (33). கோபி ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பலரிடமிருந்து பணம் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் யாரையும் இவர் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. இதனால் பணம் கொடுத்த பலர் இவரிடம் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாக இவர்களது வீடு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது 3 பேரும் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டனர். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kurumasseri ,Kerala State Ernakulam ,Sheila ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!