×

சமூக பாகுபாடுகள் இருக்கும் வரை இடஒதுக்கீட்டு தொடர வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் திட்டவட்டம்

நாக்பூர்: சமூகத்தில் பாகுபாடுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடு முறைக்கு ஆர்.எஸ்.எஸ்.இன் ஆதரவு தொடரும் என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பகவத், சில சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு அவர்கள் மற்ற மக்களுக்கு சமமாக மாறும் வரை தொடரப்பட வேண்டும் என்று கூறினார். கேள்விக்கு ஒன்றுக்கு பதில் அளித்த மோகன் பகவத், 2000 ஆண்டுகளாக ஒரு பிரிவு மக்கள் அனுபவித்த பாகுபாடுகளை நாம் மறந்துவிடக்கூடாது என்றார்.

பாகுபாட்டை எதிர்கொள்ளும் சமூகங்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்படும் வரை அவர்களுக்கான சிறப்பு நடவடிக்கைகள் அவசியம் என்ற மோகன் பகவத், அதில் இட ஒதுக்கீடும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். இடஒதுக்கீடு என்பது ஒரு பிரிவினரின் நிதி அல்லது அரசியல் சமத்துவத்தை உறுதி செய்வது மட்டுமல்ல, அவர்களுக்கு உரிய மரியாதை அளிப்பதும் கூட என்றும் அவர் கூறினார். அரசியல் அமைப்பால் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடுகளை ஆர்.எஸ்.எஸ். முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

The post சமூக பாகுபாடுகள் இருக்கும் வரை இடஒதுக்கீட்டு தொடர வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : S.S. ,Mohan Bhagavad Scheme ,Nagpur ,S.S. S.S. Mohan ,R. ,S.S. S.S. ,
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...