×

கருங்குளத்தில் திடீர் தீ விபத்து 30க்கும் மேற்பட்ட பனைகள் சேதம்

செய்துங்கநல்லூர், செப். 7: கருங்குளத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு 30க்கும் மேற்பட்ட பனைகள் சேதமாயின. கருங்குளத்தில் சிவன் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் பனை மரங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று கருங்குளம் பஜார் சத்திரம் கீழ் பகுதியில் உள்ள பனை மரத் தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த நெல்லை மாவட்ட தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்றின் வேகத்தில் கொழுந்துவிட்டு எரிந்து தீயை சுமார் அரை மணி நேர போராடி கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் 30க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயில் எரிந்து சேதமானது.

The post கருங்குளத்தில் திடீர் தீ விபத்து 30க்கும் மேற்பட்ட பனைகள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Karunkulam ,Karadanganallur ,Lord ,Shiva ,Dinakaran ,
× RELATED வள்ளியூரில் பைக் திருடிய வாலிபர் கைது