×

கிரீஸ், துருக்கி, பல்கேரியாவை மிரட்டிய புயல்; 12 பேர் பலி

இஸ்தான்புல்: கிரீஸ், துருக்கி, பல்கேரியாவை மிரட்டி வரும் புயலால் 12 பேர் பலியாகி விட்டனர். ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. கிரீஸ், துருக்கி, பல்கேரியா நாடுகளில் டேனியல் என்ற புயல் மிரட்டி வருகிறது. கன மழை மற்றும் வெள்ளத்தால் இந்த 3 நாடுகளிலும் 12 பேர் பலியாகி விட்டனர். மேலும் அனைத்து நகரங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

பல்கேரியாவில் 5 பேரும், துருக்கியில் 3 பேரும், கிரீசில் 4 பேரும் பலியாகி விட்டனர். ஏராளமான மக்களை காணவில்லை. பல கட்டிடங்கள் சரிந்து விட்டன. பலர் இடிபாடுகளில் சிக்கித்தவிக்கிறார்கள். துருக்கியில் மட்டும் 1750 வீடுகளில் வெள்ளம் சூழந்துள்ளது. கிரீஸ் நாட்டில் பெலியான் நகரில் ஏஜியோஸ் லோவன்னிஸ் பகுதியில், கார் ஒன்று சூறாவளி காற்றால் கடலுக்குள் இழுத்து செல்லப்படும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பல்கேரியாவில் 4 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The post கிரீஸ், துருக்கி, பல்கேரியாவை மிரட்டிய புயல்; 12 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Greece ,Turkey ,Bulgaria ,Istanbul ,Dinakaran ,
× RELATED ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்