×

4 பேர் கொலை ; 2 வாலிபர்கள் சரண்: முக்கிய குற்றவாளி தந்தை கைது

திருப்பூர்: பல்லடம் அருகே 4 பேர் கொலை வழக்கில் 2 வாலிபர்கள் போலீஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தை சேர்ந்த பாஜ கிளைத் தலைவர் மோகன்ராஜ், இவரது தம்பி செந்தில்குமார், தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினாம்பாள் ஆகிய 4 பேர் கடந்த 3ம் தேதி இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். விசாரணையில், நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (27), அவரது நண்பர்கள் செல்லமுத்து (24), சோனை முத்தையா (22) ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. செல்லமுத்துவை போலீசார் கடந்த 4ம் தேதி கைது செய்தனர். அவர் தப்பிக்க முயன்று குடிநீர் தொட்டியில் இருந்து குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் மற்றும் சோனை முத்தையா ஆகியோர் நேற்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரண்டைந்தனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. இந்நிலையில் வெங்கடேஷின் தந்தை அய்யப்பனை போலீசார் நேற்று கைது செய்தனர். கொலைக்கு உதவி செய்து, அரிவாள் வழங்கியதாக அவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

The post 4 பேர் கொலை ; 2 வாலிபர்கள் சரண்: முக்கிய குற்றவாளி தந்தை கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Palladam ,Tirupur district ,Saran ,Dinakaran ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...