
பல்லடம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி வாலிபர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் கொடுத்த புகாரின்படி, பல்லடம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த யுவராஜ் (24) என்பது தெரியவந்ததால் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இவர் அந்தப் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் டிரைவராக உள்ளார். வேலை பார்த்து வருகிறார்.
The post சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் டிரைவர் கைது appeared first on Dinakaran.