×

சங்ககிரி விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் கைது..!!

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஏற்பட்ட விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டிச் சென்ற நபரை கைது செய்தது போலீஸ். சின்னகவுண்டனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி 6 பேர் பலியாகினர். விபத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கு காரணமான லாரியை சங்ககிரி தனிப்படை போலீஸ் கோவையில் மடக்கிப் பிடித்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சங்ககிரி விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Crash ,Salem ,Sangagiri, Salem district ,Sangagiri ,Lorry Driver ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...