×

காவிரி நீர்திறப்பு தொடர்பான வழக்குகளை செப்டம்பர் 21-ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பு

டெல்லி: காவிரி நீர்திறப்பு தொடர்பான வழக்குகளை உடனே விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே.மிஷ்ரா அமர்வில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையிடப்பட்டது. காவிரி வழக்கை விசாரிக்கும் 3 நீதிபதிகளில் நீதிபதி நரசிம்மா இன்று விடுப்பில் உள்ளதால் வழக்கு இன்று விசாரிக்கவில்லை. வழக்குகளை செப்டம்பர் 21-ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று பட்டியலிடப்பட்டிருந்த நிலையில் வழக்கை விசாரிக்கும் 3 நீதிபதிகளில் நீதிபதி நரசிம்மா இன்று விடுப்பில் இருப்பதால் வழக்கு விசாரணை நடைபெறவில்லை.

இதன் காரணமாக தமிழ்நாடு அரசின் மூத்த வழக்கறிஞர் முகில் ரோவ்ஸ்கி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் பி.கே.மிஸ்ரா அமர்வில் ஆஜராகி இன்று இன்று வழக்கின் விசாரணை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனவே காவிரியின் வழக்கு விசாரணையை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஏனெனில் தமிழ்நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் காவிரியில் இருந்து திறக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. எனவே அவசரம் திட்டம் கருதி விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே.மிஸ்ரா மற்றும் நரசிம்மா ஆகியோர் தலைமையில் விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. இந்நிலையில் நீதிபதி நரசிம்மா விடுப்பில் இருப்பதால் வழக்கு விசாரணை மேற்கொள்ள முடியாமல் போனது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த வாரம் திங்கட்கிழமை, செவ்வாய்கிழமை இந்த வழக்கு விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக அரசை பொறுத்தவரையில் தற்போதைய சூழ்நிலையில் இந்த வழக்கு விசாரணை தேவையில்லை எனவும் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது எனவும் உடனடியாக இந்த வழக்கை விசாரிக்க தேவையில்லை என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காவிரி நீர்திறப்பு தொடர்பான வழக்குகளை செப்டம்பர் 21-ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Tamil Nadu government ,B. R.R. Kawai ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு