திருப்பூர், செப்.6: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன் (49). இவரது நண்பர் லஷ்மணன் (41), இவர்கள் இருவரும் தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் குழி தோண்டும் பணி செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு அவிநாசி பவர் ஹவுஸ் அருகே செட் அமைத்து தங்கி குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குடிபோதையில் இருந்த லஷ்மணன், முருகனிடம் சாப்பிட பணம் கேட்டுள்ளார். அதற்கு முருகன் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த லஷ்மணன், முருகனை கல்லால் தாக்கி கொலை செய்தார்.
இது குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து லஷ்மணனை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. முருகனை கொலை செய்த லஷ்மணனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த லஷ்மணனை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
The post நண்பரை கல்லால் தாக்கி கொன்றவருக்கு ஆயுள் appeared first on Dinakaran.

