×

தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கு வரவேற்பு; இட ஒதுக்கீடு, பரிசுத்தொகை அதிகரிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு என்பது மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் தமிழ் மொழி மீதான ஆர்வத்தை வளர்ப்பதற்கான சிறந்த கருவி. இந்தத் தேர்வை வாய்ப்புள்ள வழிகளில் எல்லாம் விரிவுபடுத்த வேண்டும். தமிழ்நாட்டில் ஒன்றிய, மாநில பாடத் திட்டங்களின் கீழ் 10 லட்சத்துக்கும் கூடுதலான மாணவர்கள் 11ம் வகுப்பு பயிலும் நிலையில், அவர்களில் குறைந்தது 5 லட்சம் பேராவது இந்த தேர்வை எழுதுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

அதற்காக 1500 மாணவர்களுக்கு மாதம் ₹1500 வீதம் இரு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் வெகுமதியை மாதம் ₹5000 வீதம் 5000 மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதேபோல், தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இப்போது 50சதவீத இட ஒடுக்கீடு வழங்கப்படுகிறது. இதை 80 சதவீதமாக உயர்த்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

The post தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கு வரவேற்பு; இட ஒதுக்கீடு, பரிசுத்தொகை அதிகரிக்க ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadas ,CHENNAI ,Twitter ,BAMA ,Ramadoss ,Ramdas ,Dinakaran ,
× RELATED தமிழக அரசு, கட்சிகளுடன் கலந்துபேச...