×

அண்ணாமலையை டேமேஜ் செய்த சீமான் மோடி, அமித்ஷா கிட்ட சண்டை போடுறேன்… மேஸ்திரியா வந்திருக்க நீ ஓரமா நில்லுப்பா…

கோவை: அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து சீமான் பேசி உள்ளார். கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அதிகாரியாக இருந்து வந்தவர். கச்சத்தீவு, காவிரி, முல்லை பெரியார் இதில் எல்லாம் உங்கள் நிலைப்பாடு என்ன? என அண்ணாமலை சொல்ல வேண்டும். தமிழ் தேசியம் ஒன்று இல்லை என்றே சொன்னால், அடிப்படையில் தமிழ்நாடு என்றாலே தமிழ் தேசியம்தானே.

தமிழ் தேசியம் என்று இல்லை என்றால் மோடி போகும் ஒவ்வொரு நாட்டிலும் போய் தமிழை பற்றி ஏன் பேசுகிறார்?. கர்நாடகாவில் இருக்கும்போது கன்னடத்தில் பிரவுட் கன்னடியன் என பேசிவிட்டு கர்நாடக பாஜ தலைவராக வேண்டியதுதானே. எதற்கு இங்கே வந்தீர்கள்? நான் மோடி, அமித்ஷா ஆகியோருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது, அண்ணாமலை நீங்கள் குறுக்க மறுக்க எதற்காக வருகிறீர்கள்?. ஓரமாக நில்லுங்கள். என் கட்சியில் நான் முடிவு எடுக்கிறேன். நீங்கள் முடிவு எடுக்க முடியுமா?. இந்த கட்சி நான் உருவாக்கியது, நீங்கள் இன்னும் எத்தனை நாளைக்கு அந்த கட்சியில் தலைவராக இருப்பீர்கள்?. இரண்டு வருஷம் இருப்பீங்களா?. பொன் ராதாகிருஷ்ணன் போல இதுக்கு முன்னாடி இருந்த பாஜ தலைவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?.

நீங்கள் தமிழ்நாட்டுக்கு ஒரு மேஸ்திரி. நான் அப்படி கிடையாது. நான் ராஜா மாதிரி. என்னால் முடிவு எடுக்க முடியும். 20 தொகுதியில் ஆண்களையும், 20 தொகுதியில் பெண்களையும் நிறுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

நாட்டை விற்பதில் மோடி வியாபாரம் சூப்பர்
சீமான் கூறுகையில், ‘2024ல் மோடி வந்தால் இந்தியாவே இருக்காது. இந்தியாவில் ராணுவம், தொடர்வண்டி, கல்வி, மருத்துவம், இன்சூரன்ஸ் என அனைத்தும் தனியாருக்கு கொடுக்கப்பட்டு விட்டது. மேலும், இந்திய நாட்டுக்கு என விமானம்கூட கிடையாது. நாட்டை விற்பதில் மோடி நன்றாக வியாபாரம் செய்கிறார்’ என்றார்.

உதயநிதி கருத்து கூறினால் அமித்ஷாவுக்கு ஏன் கோபம்?
பொள்ளாச்சியில் சீமான் கூறுகையில், ‘சனாதனம் குறித்து உதயநிதி கருத்து கூறினால், அமித்ஷா எதற்கு கோபப்படுகிறார்?. அமித்ஷாவுக்கு, சாதியும் மதமும் வேண்டும். அவருக்கு அது இரு கண்கள். நாயில் கூட உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி உள்ளது. இது ஒரு மனநோய். இந்த வைரஸ்களை ஒழிக்க முடியும். பல ஆயிரம் ஆண்டுகளாக ஒழிக்க முடியாமல் உள்ளது. அதனை ஒழிக்க முடியும். எல்லோரும் சேர்ந்து ஒழிக்க வேண்டும். ஏற்ற தாழ்வுகளை சரிசெய்து, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க செய்ய வேண்டும்’ என்றார்.

The post அண்ணாமலையை டேமேஜ் செய்த சீமான் மோடி, அமித்ஷா கிட்ட சண்டை போடுறேன்… மேஸ்திரியா வந்திருக்க நீ ஓரமா நில்லுப்பா… appeared first on Dinakaran.

Tags : Seeman Modi ,Annamalaya ,Amitsha ,Orama Niluppa ,Maestria ,Govay ,Seeman ,Anamalayas ,Govai Airport ,Annamalai ,Mastria ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...