×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பாஜவை கண்டித்து தெருமுனை கூட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பஜார் வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் வட்ட செயலாளர் விநாயகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நேரு, மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட தலைவர் செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

இதில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத பாஜ அரசு குறித்தும், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த வேலை வாய்ப்பை உருவாக்காதது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியது. இதனால், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு என பல்வேறு வகையில் பொதுமக்களை வஞ்சிக்கும் பாஜ அரசு குறித்து விளக்க உரையாற்றப்பட்டது.

The post மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பாஜவை கண்டித்து தெருமுனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : marxist communist ,Uttramerur ,Marxist Communist Party ,Uttramerur Bazaar Street ,Marxist CP ,Baja ,Dinakaran ,
× RELATED கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும்...