×

திருக்குறள் முற்றோதுதல் போட்டி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு

நாகர்கோவில், செப்.6: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற திருக்குறள் முற்றோதுதல் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு கலெக்டர் தர் பரிசு வழங்கினார். அவர்களது விபரம்: திருக்குறள் முற்றோதுதல் செய்த கோட்டார் அல்போன்சா பள்ளி 3-ம் வகுப்பு மாணவி ந.ஹர்ஷா, அஞ்சுகிராமம் ஜாண்ஸ் மத்திய பள்ளி 3-ம் வகுப்பு மாணவர் ம.ச.தம்சித் ஜீவா, ராமன்புதூர் சிறுமலர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி 4-ம் வகுப்பு மாணவி ச.அகல்யா, வடலிவிளை அரசு தொடக்கப்பள்ளி 5-ம் வகுப்பு மாணவன் ஆ.ராஜி, கிருஷ்ணன்கோவில் அரசு நடுநிலைப்பள்ளி 5-ம் வகுப்பு மாணவிசி.லட்சரா, ராமன்புதூர் சிறுமலர் மகளிர் மேல்நிலைப்பள்ளி 6-ம் வகுப்பு மாணவி ச.ஹேன்சிகா,ராமன்புதூர் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி கோ.சந்தான லட்சுமி, நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவன் செ.அபினேஷ் குமார், பறக்கை அரசு உயர்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் ஞா.நிதீஸ்லால், அகஸ்தீஸ்வரம் அமிர்த வித்யாலயம் சீனியர் செகண்டரி பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் ரா.சி.ஹரிகரன், தேரிவிளைகுட்ஷெப்பர்ட் பள்ளி 9-ம் வகுப்பு மாணவி தி.அக்சயா, கன்னியாகுமரி புனித ஜோசப் பள்ளி 4-ம் வகுப்பு மாணவன் கு.திலக், கணபதிபுரம்  ராம்ஜி மேல்நிலைப்பள்ளி 5-ம் வகுப்பு மாணவர் ச.அ.நிதிஷ் மற்றும் அஞ்சுகிராமம் ஜாண்ஸ் சென்ரல் பள்ளி 9-ம் வகுப்பு மாணவி பொ.விஷாலி உள்ளிட்ட 14 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.15 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் தர் வழங்கினார்.

The post திருக்குறள் முற்றோதுதல் போட்டி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Thirukkural ,Nagercoil ,Tirukkural Roundup ,Tamil Development Department ,
× RELATED திருக்குறளில் உலகம்!