×

உ.பியில் காட்டு தர்பார் நடக்கிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

லக்னோ: உ.பி.யில் காட்டு தர்பார் நடக்கிறது, மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந் துள்ளது என காங். கடுமையாக சாடி உள்ளது. இதுகுறித்து உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “உத்தரபிரதேசத்தில் ஊழல் தலை விரித்து ஆடுகிறது. சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் லக்கிம்பூர் கேரியில் ஒன்றிய அமைச்சரின் மகன் விவசாயிகளை கொன்றது. ஆகஸ்ட் 30 சரயு விரைவு ரயிலில் பெண் காவலர் மீது கொலைவெறி தாக்குதல், செப்டம்பர் 1ல் ஒன்றிய அமைச்சர் கவுஷல் கிஷோரின் மகன் வீட்டில் இளைஞர் படுகொலை என பாஜ ஆட்சியில் கொலை குற்றங்கள் அதிகரித்துள்ளன.

ஒன்றிய அமைச்சர் மகன் வீட்டில் இளைஞர் சுட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் காவல்துறை சம்பிரதாய நடவடிக்கைகளை மட்டுமே எடுத்துள்ளது. பாஜ அரசு தன் அமைச்சர்களை காப்பாற்ற முயற்சி செய்கிறது. இந்த வழக்கில் தற்போது பதவியில் உள்ள நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். நாட்டில் பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஊழல் போன்றவற்றால் மக்கள் சலிப்படைந்துள்ளனர். தேர்தலில் வெற்றி பெறுவதில் மட்டுமே பாஜ கவனம் செலுத்துகிறது. மக்கள் பிரச்னைகள் பற்றி அது கவலைப்படுவதில்லை. 2024 மக்களவை தேர்தலிலும், 2027 உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜ தோற்கடிக்கப்படும். காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெறும்” இவ்வாறு கூறினார்.

The post உ.பியில் காட்டு தர்பார் நடக்கிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : U. The Wild ,PP ,Durban ,Lucknow ,U. GP ,U. P. Wild ,Congress ,Dinakaran ,
× RELATED உடல் பருமன் குறைப்பு...