×

திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம் வரும் 9ம் தேதி நடக்கவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் வரும் 9ந் தேதி நடைபெற்று உள்ளது. அதன்படி திருவள்ளூர் வட்டம், சிவன்வாயல் கிராமம் நியாயவிலை கடை அருகில், ஊத்துக்கோட்டை வட்டம் பனையஞ்சேரி கிராமம் நியாயவிலை கடை அருகில், பூந்தமல்லி வட்டம் கம்மவார்கண்டிகை கிராமம் வி.ஏ.ஓ.அலுவலகம், திருத்தணி வட்டம் சூரியநகரம் கிராமம் நியாயவிலை கடை அருகில், பள்ளிப்பட்டு வட்டம் ஈதலகுப்பம் கிராமம் நியாயவிலை கடை அருகில், பொன்னேரி வட்டம் புது எருமைவெட்டிபாளையம் நியாயவிலை கடை அருகில், கும்மிடிப்பூண்டி வட்டம் ராஜாபாளையம் கிராமம் நியாயவிலை கடை அருகில், ஆவடி வட்டம் திருநின்றவூர் வி.ஏ.ஓ அலுவலகம், ஆர்.கே. பேட்டை வட்டம் ராகவநாயுடு குப்பம் கிராமம் நியாயவிலை கடை அருகில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறும், விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யுமாறும் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur District ,Tiruvallur ,Tiruvallur… ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு, திருவள்ளூர்...