- ஆசியன்-இந்தியா உச்சி மாநாடு
- மோடி
- இந்தோனேஷியா
- புது தில்லி
- 20வது ஆசியன்-இந்தியா உச்சி மாநாடு
- 18ம் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு
- பிரதமர் மோடி
- தின மலர்
புதுடெல்லி: 20வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று இரவு இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா நகருக்கு செல்கிறார். இன்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு செல்லும் பிரதமர் மோடி, நாளை மாலையில் டெல்லி திரும்புவார். ஜி20 உச்சிமாநாடு நடைபெறுவதால் உடனடியாக பிரதமர் டெல்லி திரும்ப உள்ளார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்த மாநாட்டில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன.
The post ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா பயணம் appeared first on Dinakaran.